Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொங்கல் கோலாகலம்: பாரம்பரியத்துடன் ... சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி
எழுத்தின் அளவு:
தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி

பதிவு செய்த நாள்

15 ஜன
2020
01:01

தஞ்சாவூர்: திருவையாறு 173வது தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, இன்று(ஜன.,15) காலை நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள் கலந்துக்கொண்டு, தியாகராஜருக்கு இசை அஞ்சலி  செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. 173வது ஆண்டு ஆராதனை விழாவை, கடந்த 11ம் தேதி மாலை துணை ஜனாதிபதி வெங்கையா  நாயுடு துவக்கிவைத்தார். அன்று முதல் தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நடந்து வருகிறது. இன்று ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையொட்டி காலை திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து  உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள விழா பந்தலுக்கு வந்தனர். தியாராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. பிறகு, மங்கள இசை  துவங்கியது.

சரியாக 9 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது.தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக... என்ற பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொள ராகம், ஆதி தாளத்தில் அமைந்த துடுகு  கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ... என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ஸாதிஞ்செநெ ஓ மநஸா... என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கனகன ருசி ரா கநகவஸந நிந்நு... என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி  தாளத்தில் அமைந்த எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு... ஆகிய பாடல்களை ஆயிரத்திற்கு மேற்பட்ட கலைஞர்கள் ஒருமித்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.  பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும். நாதஸ்வர கச்சேரி, பின்னர் உபன்யாசம் நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி, 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar