நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், அங்கயற்கண்ணியம்மை உடனமர் சோமேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கவிழா நடக்கிறது. நாமகிரிப்பேட்டையில், அங்கயற்கண்ணியம்மை உடனமர் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இதற்கு கற்கோவில் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது. காலை, 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலிலிருந்து கயிலை வாத்தியம் முழங்க, சிவனடியார்களுடன் பன்னிரு திருமுறை புறப்பாடு நடக்கிறது. 7:00 மணிக்கு திருவாசக ஞானவேள்வி வழிபாடு தொடங்குகிறது. 8:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் திருப்பணி தொடங்குகிறது. மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடு, திருவடி விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சோமேஸ்வரர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை செய்து வருகிறது.