Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈஷாவில் மாட்டு பொங்கல் கோலாகலம் புத்தாநத்தத்தில் ஆயிரக்கணக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் அருகே, 18ம் நூற்றாண்டு சதிகல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
12:01

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, 18ம் நுாற்றாண்டை சார்ந்த, இரண்டு, சதிகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு. பாலாஜி தலைமையில், தமிழர் தொன்மம் குழு அமைப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த, எடமிச்சி கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டு இரண்டு, சதிகல் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி கூறியதாவது: போரில் வீர மரணமடைந்த கணவரின் உடலோடு, அவனது மனைவி தீ மூட்டி, உயிரை மாய்க்க உடன்கட்டை ஏறும் நிகழ்விற்கு, சதி என்று பெயர். மரணத்தை தழுவிய கணவன், மனைவியின், நினைவை போற்றும் வகையில், அவர்களது உருவங்களை சிற்பமாக செதுக்கி வழிபடுவர். இதற்கு. சதி கல் என்று பெயர். எடமிச்சி கிராம குளக்கரையில், உடைந்த நிலையில், இரண்டு சதிகற்களை கண்டறிந்தோம். அதில், ஒரு சதிக்கல்லில், எட்டு வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது. அதில், விஷ வருஷம், ஆனி மாதம், செந்தாமள் சிவலோகம் என, உள்ளது. சில வரிகள் சிதைவுற்று உள்ளன. இது, 1706ம் ஆண்டு, செந்தாமள் என்ற பெண், கணவன் இறந்தவுடன், தீ மூட்டி உடன்கட்டை ஏறியுள்ளார் என, அறிய முடிகிறது. செந்தாமள் உருவம் வலது பக்கமும், அவரது கணவர் உருவம் இடது பக்கமாக உள்ளது. இரண்டாவது சதிகல்லில், வலது பக்கம் கணவனின் உருவமும், இடப்பக்கம் மனைவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.இவை, 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது. எங்களது கள ஆய்வில், உத்திரமேரூர் பகுதியில், முதன்முதலாக கல்வெட்டுடன் கூடிய, சதிகல் இங்கே நேற்றுமுன்தினம் கண்டெடுத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar