பதிவு செய்த நாள்
25
ஜன
2020
11:01
ஓமலூர்: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கைலாசநாதர் ஆலய காலத்திலிருந்தே, இக்கோவிலை சுற்றியுள்ள, 18 பட்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும், தை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக வரும், அமாவாசை தினத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தைப்பூச திருநாளில், கைலாசநாதர் கோவில், பத்ர காளியம்மன் தேர் ஆகிய இரண்டும் ஒன்றாக செல்லும். தை அமாவாசை தினமான நேற்று, பத்ர காளியம்மன் கோவில் தேரோட்டம் மதியம், 2:50 மணிக்கு துவங்கியது. முன்னதாக கோவில் நிர்வாகத்தினர், கட்டளைதாரர்கள் ஆகியோருக்கு, பொட்டு வைக்கப்பட்டு மரியாதை செலுத்திய பின், தேரோட்டம் துவங்கியது. மேள தாளம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஆகியவற்றுடன், நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, இரவு தேர் நிலையை அடைந்தது. தைப்பூச நாளன்று, கைலாசநாதர் தேரோட்டம் நடைபெறவுள்ளது.