ஆண்டிபட்டி அருகே டி.வி.ரங்கநாதபுரத்தில் ரத்தின விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இரவில் நடந்த நிகழ்ச்சியில் கோபுர ஸ்துாபி ஸ்தாபிதம் செய்யப்பட்டது.