Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதுகுளத்துார் முருகன் கோயிலில் ... திருச்செந்துார் கோயில் ராஜகோபுர வாசலை திறக்க வழக்கு திருச்செந்துார் கோயில் ராஜகோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோயிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
11:01

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில், பிப்., 5ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் துவங்கியது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், 23 ஆண்டுக்கு பின், பிப்.,5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. டிச., 2ம் தேதி, கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் நடந்தது. விமான கோபுரத்தில் உள்ள, 12 அடி உயர கலசம் புதுப்பிக்கப்பட்டு, 30ம் தேதி, மீண்டும் பொருத்தப்பட உள்ளது.

நேற்று காலை, பூர்வாங்க பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முன்னதாக, பெருவுடையார் சன்னதியில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மங்கல வாத்தியம் முழங்க, பூர்வாங்க பூஜை நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து, 30ம் தேதி வரை, ஹோமம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், 31ம் தேதி வெண்ணாற்றங்கரையிலிருந்து புனித நீர் கொண்டு வருதலும், பிப். 1ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை, எட்டுகால யாகசாலை பூஜையும், 5ம் தேதி காலை, 9:30 மணியிலிருந்து, 10:30மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

புதிய கொடிமரம் பிரதிஷ்டை: தஞ்சாவூர் பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம், காலப்போக்கில் சேதமடைந்தது. மன்னர் இரண்டாம் சரபோஜியால், புதிய கருங்கல் பீடம் கட்டப்பட்டு, 1814ல், புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. இக்கொடி மரம் பழுதடைந்ததால், 2003ல், புதிய கொடி மரம் அமைக்கப்பட்டது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக, புனரமைப்பு செய்வதற்காக, கொடி மரத்தில் இருந்த பித்தளை கவசங்களை கழற்றியபோது, கொடிமரமும் சேதம் அடைந்திருந்தது, தெரிய வந்தது. இதையடுத்து, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழைய கொடி மரம், 17 ஆண்டுகளுக்கு பின், 12ம் தேதி அகற்றப்பட்டது. புதிய கொடி மரம் அமைப்பதற்காக, சென்னையிலிருநது, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 40 உயர பர்மா தேக்கு வரவழைக்கப்பட்டது. புதிய கொடிமரம் வடிவமைத்து, நேற்று காலை பூஜைகள் நடத்தப்பட்டது. தீபாரதனைக்கு பின், பீடத்தில், கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், கலெக்டர் கோவிந்தராவ், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்திய தொல்லியல் துறை முதல்நிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar