Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குறிச்சி பொங்காளியம்மன் கோயில் ... பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் தங்கரதம் பவனி பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கறுப்பு கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
கறுப்பு கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம்

பதிவு செய்த நாள்

11 மார்
2026
11:03

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பகதூர்பேட்டை பகுதியில் வீற்றிருக்கும் கறுப்பு கங்கை அம்மன் கோயிலில் இன்று ( புதன்கிழமை) நடைபெறும் வருடாந்திர திருவிழா விற்காக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கொட்டே . சாய். பிரசாத், கறுப்பு கங்கை அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கன்டா.ரமேஷுடன் இணைந்து, வேதப் பண்டிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க கறுப்பு கங்கைஅம்மனுக்கு பாரம்பரிய முறையில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர். 


இந்த நிகழ்வில் பேசிய கறுப்பு கங்கைஅம்மன் தேவஸ்தான தலைவர் கன்டா.ரமேஷ், இன்று நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தங்கள் பகுதியில் உள்ள கறுப்பு கங்கை அம்மன் கோயிலுக்கு ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசை பொருட்களை  வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் கடைப் பிடிப்பதன் காரணமாகவே எதிர்கால சந்ததியினர் நமது பாரம்பரிய நடைமுறைகளை அறிந்து, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியத்தை உணருவார்கள்” என்றார். மேலும் பகதூர்பேட்டை கறுப்பு கங்கை அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர் வரிசை வழங்குவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தக் கோயிலுக்கு சீர் வரிசை ( பூஜை பொருட்களை) வழங்குவதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத் தெரிவித்தார். இன்று நடைபெறும் கங்கைஅம்மன் திருவிழாவின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான சூழ்நிலையில் ஜாத்திரத்தை நடத்துமாறு கமிட்டியினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்.. அனில், பிரதீப், நாராயணா, ராஜேந்திரன், குணா, யாதகிரி, சுப்ரமணியம், சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar