கறுப்பு கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 11:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பகதூர்பேட்டை பகுதியில் வீற்றிருக்கும் கறுப்பு கங்கை அம்மன் கோயிலில் இன்று ( புதன்கிழமை) நடைபெறும் வருடாந்திர திருவிழா விற்காக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கொட்டே . சாய். பிரசாத், கறுப்பு கங்கை அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கன்டா.ரமேஷுடன் இணைந்து, வேதப் பண்டிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க கறுப்பு கங்கைஅம்மனுக்கு பாரம்பரிய முறையில் பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் பேசிய கறுப்பு கங்கைஅம்மன் தேவஸ்தான தலைவர் கன்டா.ரமேஷ், இன்று நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தங்கள் பகுதியில் உள்ள கறுப்பு கங்கை அம்மன் கோயிலுக்கு ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு சீர் வரிசை பொருட்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் கடைப் பிடிப்பதன் காரணமாகவே எதிர்கால சந்ததியினர் நமது பாரம்பரிய நடைமுறைகளை அறிந்து, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியத்தை உணருவார்கள்” என்றார். மேலும் பகதூர்பேட்டை கறுப்பு கங்கை அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர் வரிசை வழங்குவது வழக்கம் என்றும், இந்த ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இந்தக் கோயிலுக்கு சீர் வரிசை ( பூஜை பொருட்களை) வழங்குவதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே. சாய் பிரசாத் தெரிவித்தார். இன்று நடைபெறும் கங்கைஅம்மன் திருவிழாவின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான சூழ்நிலையில் ஜாத்திரத்தை நடத்துமாறு கமிட்டியினர் மற்றும் கிராம மக்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்.. அனில், பிரதீப், நாராயணா, ராஜேந்திரன், குணா, யாதகிரி, சுப்ரமணியம், சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.