பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் தங்கரதம் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2026 11:03
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு பிரம்மோத்சவம் நிறைவடைந்தது.
கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலின் பிரம்மோத்சவம், பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கும் எனவும், இரவு நேரங்களில் வாகன உத்சவம் வரும் எனவும் கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி, தங் கவயல் தாசில்தார் பாரத், ஹிந்து அறநிலையத் துறை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், மார்ச் 9ம் தேதி, ‘தங்கரதம்’ உத்சவம் குறித்து அறிவிப்பில் இடம் பெறவில்லை. ஆயினும், ‘நித்யோத்சவா’ என்ற பெயரில் ‘தங்கரதம்’ நகர்வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். நள்ளிரவு 11:30 மணிக்கு புறப்பட்ட தங்க ரதம்- மறுநாள் காலை முதல் 7:00 மணிக்கு கோவிலை சென்றடைந்தது. பிரம்மோத்சவம் நேற்று காலையுடன் நிறைவடைந்தது.