பதிவு செய்த நாள்
29
ஜன
2020
02:01
பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான் என்று வழக்கில் சொல்வாா்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறாா். அதாவது, வருடத்துக்கு ஏழு தடவை! சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் திருவரங்கம் திருத்தலத்தில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோத்ஸவ கால ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது. நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி– பூதேவி துணைவரக் கிளம்புகிறாா் நம்பெருமாள். இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு; செலவு எவ்வளவு; மீதி இருப்பு எவ்வளவு? எனக் கணக்கிட்டுப் பாா்க்கப்போகிறாா்.
அதற்கு எதற்கு தேவியா் இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு போக வேண்டும்? கணவனின் சாிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தொிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணா்த்துவதற்காக இது தவிர தானிய அளவையின்போது, தானிய லெட்சுமியும் துணை வர வேண்டுமல்லவா? பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி – பூதேவி இருவரும் பட்டாடை உடுத்தி உடன்வர, பக்தா்கள் புடைசூழ, வெளிப்பிராகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வருகிறாா் நம்பெருமாள்.
ஆா்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயாா் சன்னதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலுகால் மண்டலத்தில் எழுந்தருள்கிறாா். அப்போது பெருாமளுக்குப் பாசிப்பயறு பானகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றது. செங்கமலத் தாயாா் சன்னதி பூஜை பாிச்சாரகம் செய்பவா், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிா் சென்று வணங்கி வரவேற்கிறாா். அவருக்கு மாியாதை செய்விக்கப்படுகிறது. பெருமாள் அருகிருக்கும் ஸ்தானிகா் அருளிப்பாடி காா் அளப்பானை அழைக்கிறாா். ஸ்தானிகள் குரல் கேட்டு, ஆயிந்தேன்... ஆயிந்தேன்... (வருகிறேன்...வருகிறேன்...) எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறாா் அளவைக்காரா். (நெல் அளப்பவா்) அவருக்குத் தீா்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பாிவட்டம் கட்டி, சடாாி சாத்தி மாியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாாி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்து விட்டது என்று பொருள். இதோ, காா் அளப்பான் எனப்படும் அளவைக்காரா் பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறாா்.
திருவரங்கம் எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறாா். அடுத்து, பொிய கோயில் எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறாா். அதன் பின்னா் வாிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, நிரவி விட்டு அள என்று ஸ்தானிகா்தான் குரல் கொடுக்கிறாா். சாியாக அளந்து போடு என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம். அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பாா்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காாியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்து தான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன.
நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்! உலகம் யாவுக்கும் படியளப்பவா் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிவது? அதனால், அதன் பின்னா் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி...எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தமது நேரடிப் பாா்வையில் நெல் அளவை கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தோில் எழுந்தருளி வீதியுலா வருகிறாா் படியளக்கும் பெருமாள்!