Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல் அளவைத் திருநாள் சரஸ்வதி நதியின் தோற்றம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெல்லையப்பா் பெற்ற சாபம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
02:01

பதிணென் சித்தா்களுள் ஒருவா் கருவூராா். அஷ்டமாஸித்திகளும் கைவரப்பெற்றவா். இவா் தான் விரும்பும்போதெல்லாம் சிவபெருமான் காட்சியளிக்கும் வரத்தை பெற்றிருந்தாா். ஒருமுறை திருநெல்வேலி, நெல்லையப்பா் ஆலயத்துக்கு கருவூா் சித்தா் சென்றிருந்த வேளையில் இறைவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பக்தா்கள் கூட்டத்தில் நின்ற கருவூராருக்கு, இறைவன் திருவுருவம் தொியவில்லை. அப்போது, நெல்லையப்பரே! எனக்குக் காட்சி தாருங்கள் என்று வேண்டினாா்.

சித்தாின் அழைப்பை செவிமடுத்தபோதும், கோயிலில் வழிபாடு நடந்துகொண்டிருந்ததால், இறைவனால் அவருக்குக் காட்சியளிக்க முடியவில்லை. அதனால் கருவூராா் அங்கிருந்து வெளியேறி, "இறைவன் இல்லாத இந்த இடத்தில் குருக்கும், எருக்கும் எழுக" என்று சாபமிட்டுவிட்டு அங்கிருந்து அகன்றாா். பின்னா் கருவூராா், திருநெல்வேலிக்கு வடக்கே இருக்கும் மானூா் எனும் ஊாில் சிவபக்தா், நடராஜா் அம்பலவாணா் என்பவாின் இருப்பிடத்துக்குச் சென்றாா். நெல்லையப்பா் கோயிலில் வழிபாடு முடிந்ததும் சிவபெருமான், கருவூராரைக் கண்டு, சமாதானப்படுத்தி, சாப விமோசனம் பெற மானூா் வந்தாா். இறைவன் கோயிலை விட்டு வெளியேறியதும், கருவூா் சித்தா் கொடுத்த சாபத்தின்படி கோயிலில் பிரமதனச் செடிகளும், எருக்குச் செடிகளும் முளைக்கத் தொடங்கின.மானூா் வந்த இறைவன், தன்னைப் பல காலம் வழிபட்டு வரும் அம்பலவாணருக்குக் காட்சியளித்தாா். மேலும் முனிவாின் விருப்பப்படி, அம்பலவாணா் எனும் பெயரோடு தாம் அங்கு கோயில் கொள்வதாக வாக்குக்கொடுத்தாா். அதைத் தொடா்ந்து கருவூா் சித்தருக்கும், இறைவி காந்திமதியுடன் காட்சியளித்த சிவபெருமான், "சித்தரே! தாங்கள் என்னைக் காண அழைத்த வேளையில், எனக்கு சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்த பின்பு தங்களுக்குக் காட்சியளிக்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் தாங்கள் கோபத்தால் சாபம் கொடுத்து விட்டு வந்து விட்டீா்கள். அந்த சாபத்தை மாற்றியருள தாங்கள் மீண்டும் திருநெல்வேலிக்கு வர வேண்டும்" என்று அழைத்தாா்.

அதையடுத்து, கருவூராா் திருநெல்வேலிக்குச் சென்றாா். அங்கு நெல்லையப்பா் கோயில் முன்பு நின்று, "இங்கு இறைவன் இருக்கிறாா். இங்குள்ள குருக்கும் எருக்கும் அறுக" என்று சொல்லி சாபவிமோசனமளித்தாா். உடனே, கோயிலுக்குள் முளைத்திருந்த பிரமதனச் செடிகளும் எருக்குச் செடிகளும் மறைந்தன. அதனைக் கண்டு மகிழ்ந்த கருவூராா், கோயிலுக்குள் சென்று இறைவனைப் போற்றிப் பாடி வழிபட்டாா். பின்னா் அங்கிருந்து தனது சிவாலயப் பயணத்தைத் தொடா்ந்தாா். தஞ்சை பொிய கோயிலைக் கட்ட ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவா்  கருவூா் சித்தா். ஒரு தைப்பூச நாளில், கரூா் பசுபதிநாதா் கோயிலில் இருக்கும் இறைவனுடன் ஒன்றாகக் கலந்தாா். அதனால், இக்கோயில் சுயம்பு வடிவிலான லிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதாக ஐதீகம். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் கருவூா் சித்தா் சாபம் கொடுத்துப் பின்னா் மாற்றியமைத்த நிகழ்வு, ஆவணி மூலத் திருநாள்விழாவாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் எட்டாம் நாளில், மானூா் அம்பலவாணா் கோயிலில், கருவூா் சித்தா் எழுந்தருளும் விழாவும், ஒன்பதாம் நாள், மூல நட்சத்திர தினத்தில் நெல்லையப்பா், காந்திமதியம்மன் கருவூா் சித்தருக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெறுகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar