தியாகதுருகம்:கொங்கராயபாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்ச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த கொங்கராயபாளையம் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அம்ச மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலை புதுப்பிக்க ஊர் பொதுமக்கள் சார்பில் நிதி திரட்டி கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பணி துவங்கியது.கோவில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், நவக்கிரக நாயகர், காத்தவராயன், வேட்டையனார், கருப்ப சுவாமி சன்னதி அமைக்கப்பட்டது.1.5 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடக்கிறது.இதை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது.நாளை காலை யாகசாலை பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளன.