Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் உலகளந்த பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம் உலகளந்த பெருமாள் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
எழுத்தின் அளவு:
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
11:02

சென்னை: திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மருந்தீஸ்வரர் கோவில். இக்கோவிலில், மூலவர் மருந்தீஸ்வரராகவும், அம்பாள் திரிபுரசுந்தரியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையில், அறநிலையத் துறை சார்பில், திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்தாண்டு, ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. 75 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் திருப்பணிகள் பூர்த்தியாகின. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை, 7:00 மணிக்கு, ஆறாம் கால அவபிருதகால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கிருஹபிரிதிதானம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு கடப்புறப்பாடு நடந்தது.


காலை, 9:50 மணிக்கு ராஜகோபுரங்கள், விமான கோபுரங்களுக்கு, சிவ வாத்தியங்கள் ஒலிக்க, கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின்போது, ராஜகோபுரங்களுக்கு, ‘கிளைடர்’ விமானம் மூலம் மலர் துாவப்பட்டது.  இதில், பங்கேற்ற ஏராளமான பக்தர்களின் ஓம் நமச்சிவாய கோஷத்துடன் வழிபாடு நடத்தினர். இதையடுத்து, மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். இரவு, 7:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, தியாகராஜ சுவாமி திருக்கல்யாண வைபவம், திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar