Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ... திருப்பரங்குன்றத்தில் மலைமேல் செல்ல தடை; பாதைகள் அடைக்கப்பட்டதால் போலீசாருடன் குடியிருப்போர் வாக்குவாதம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவம்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
03:12

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் ஜென்ம நட்சத்திரமான, கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அனைத்து வைணவ திருத்தலங்களிலும், திருமங்கை ஆழ்வார் வைபவம் சிறப்பாக நடைபெறும். காரமடை அரங்கநாதர் கோவிலில் திருமங்கை ஆழ்வார் வைபவத்தில் அதிகாலை மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கால சந்தி பூஜை முடிந்து, திருமங்கை ஆழ்வார் உற்சவமூர்த்தி, ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார். அங்கு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தன.  பின்பு வெள்ளி சப்பரத்தில் வெண் பட்டுக்குடை சூழ, மேளதாளம் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன், திருமங்கையாழ்வார் வீற்றிருந்தார். அங்கு அவருக்கு மாலை, பரிவட்டம், சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் சடாரி மரியாதை பெற்று ராமானுஜர் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை, சாற்று முறையை அடுத்து, மகா தீபாராதனை நடந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் செயல் அலுவலர் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar