Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் மலைக்கோவில், ... குட்டையூர் மாதேஸ்வரன் மலை மீது ஏற்றப்பட்டது கார்த்திகை தீபம் குட்டையூர் மாதேஸ்வரன் மலை மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை தீபத்திருவிழா; தீபங்களால் ஜொலித்த கோவில்கள், வீடுகள்
எழுத்தின் அளவு:
கார்த்திகை தீபத்திருவிழா; தீபங்களால் ஜொலித்த கோவில்கள், வீடுகள்

பதிவு செய்த நாள்

04 டிச
2025
12:12

திருப்பூர்: கார்த்திகை தீபத்திருவிழாவில், திருவண்ணாமலையில் மஹாதீபம் ஏற்றி வைக்கப்பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, நேற்று மாலை, 6:30 மணிக்கு திருப்பூர் நகரப்பகுதி தீப ஒளியில் ஒளிர்ந்தது.


ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை,4:00 மணிக்கு, சிறப்புபூஜையை தொடர்ந்து, மகாதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தீமையை அழிக்கும் வகையில், சொக்கப்பனை எரிக்கப்பட்டு, ‘அரோகரா... அரோகரா...’ என கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும், தீபஸ்தம்பத்தில் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது. முன்னதாக, ஒரு தட்டில் ஐந்து அகல் விளக்குகளில் ‘பரணி தீபம்’ ஏற்றி வைக்கப்பட்டது. அருகிலேயே, தென்னை ஓலையை கொண்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கொங்கணகிரி முருகன் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் என, அனைத்து கோவில்களிலும், கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடந்தது. திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலைகள், வீடுகள், கடைகள், நிறுவனங்களில், மாலையில் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது. வீட்டு வாசலில் கோலமிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் அதனை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர். நிலவு, வாசப்படிகள், சுற்றுச்சுவர், வீட்டின் மாடியில் உள்ள கைப்பிடி சுவர், தெருக்குழாய் அருகே, அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர். ஒரே நேரத்தில், அனைவரும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்ததால், குடியிருப்பு பகுதிகள் தீப ஒளியில் ஜொலித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar