Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகரில் மகா சிவராத்திரி ... பிரான்மலை உச்சிக்கு பக்தர்கள் பால்குட  ஊர்வலம் பிரான்மலை உச்சிக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 175 கோயில்களில் மகாசிவராத்திரி திருவிழா
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 175 கோயில்களில் மகாசிவராத்திரி திருவிழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:02

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 175 கோயில்களில் நேற்றிரவு விடிய விடிய சிவராத்திரி பூஜைகள் நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய சிவாலயங்களான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்,தொண்டி சிதம்பரேஸ்வரர், நம்புதாளை நம்பு ஈஸ்வரர், திருவெற்றியூர் வன்மீக நாதர், தீர்த்தாண்டதானம் சகல தீர்த்தமுடையவர்கோயில்,நயினார்கோவில் நாகநாத சுவாமி, உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்,  முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட 175 கோயில்களில் சிறப்புப் பூஜைகளும், அபிஷேகங்களும் நேற்று காலை முதல் இரவு மற்றும் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விரதமிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நள்ளிரவில் மகா சிவராத்திரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தீபாராதனைக்கு பின் சிவ பக்தர்கள் விரதத்தை முடித்து வழிபாடு நடத்தினர்.  ஆன்மிக சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ராமநாதபுரம் சொக்கநாதர் ஆலயத்தில் பிரம்ம குமாரிகள் சார்பில் பட பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவவழிபாடு நடத்தினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குலதெய்வங்களுக்கு பொதுமக்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.சொந்த ஊரிலிருந்து மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று தங்கியவர்கள் கூட மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊரில் உள்ள குல தெய்வத்தை வழிபட வந்ததால் அனைத்துப் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. பூஜைப் பெட்டிகள் சுமந்தும், கருப்பணசாமி வேடமணிந்தும் கிராமங்களில் குலதெய்வ வழிபாடு பூஜைகள் நடந்தன.

*கமுதி அருகே கோவிலாங்குளம் திருக்காலுடைய அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜை, அபிேஷகங்களுடன் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் கரும்பாலை தொட்டில், பட்டு செலுத்தி நேர்த்திகடன் செலுத்தினர். அபிராமம் சப்பாணி கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாவிளக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

*திருப்புல்லாணி அருகே பொக்கனரேந்தலில் உள்ள புல்லாணி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சாமுண்டீஸ்வரி, பைரவர், வீரபத்திரர், ராக்காச்சியம்மன், அகத்தியர் பீடம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி பொங்கலிட்டனர். பூஜைகளை பூஜகர் அரியமுத்து செய்தார். அன்னதானம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான செயல் அலுவலர் ராமு, பேஷ்கார் கண்ணன் உட்பட ஏராளமான குலதெய்வ குடிமக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar