Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடல்நலம் பாதிப்பா பழநி கோயிலுக்கு ... கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும்! கோவில்களில் கூட்டம் கூடுவதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் தவிப்பு
எழுத்தின் அளவு:
பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

19 மார்
2020
11:03

மேட்டுப்பாளையம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பகாசுரன் சுவாமி சிலைக்கு செல்லும் தரைப்பகுதி, அதிக சூடாக இருப்பதால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வனபத்திரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அம்மனை வழிபட்ட பின்பு, குண்டம் நடைபெறும் பகுதி வழியாக பகாசூரன் சுவாமி சன்னதிக்கு சென்று வழிபடுவது வழக்கம். கோவிலில் இருந்து பகாசூரன் சன்னதி, 500 அடி தூரத்தில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெறும் காலில் பகாசூரன் சன்னதிக்கு பக்தர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது பகாசூரன் சன்னதி அருகே, 20 அடிக்கு மட்டும் மேட் போடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வெப்பம் தாங்க முடியாமல், பக்தர்கள் வேகமாக ஓடிச் சென்று சாமியை கும்பிடும், கும்பிடாமலும் ஓடி வருகின்றனர். அதனால் கோவிலில் இருந்து பகாசூரன் சன்னதி வரை, மேட் போடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," வழக்கமாக ஏப்ரல் மாதம் பாதிக்குமேல் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் பந்தல் அமைத்துக் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் கோவில் அம்மன் சன்னதி வாசப்படியில் இருந்து, பகாசூரன் சன்னதி வரை, இரு பக்கம், 600 அடிக்கு மூன்று அடி அகலத்தில் மேட்டுகள் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) பக்தர்கள் நடந்து செல்லும் வழிகளில் தரையில் பதிக்கப்பட்ட உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நுழைவாயில் முன்பு கை, கால்களை சுத்தமாக கழுவி வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar