Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை ... ரம்ஜான் சிந்தனைகள்- 15: அன்பால் அரவணைப்போம் ரம்ஜான் சிந்தனைகள்- 15: அன்பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் அன்னமாச்சார்யா 612வது ஜெயந்தி உற்சவம்
எழுத்தின் அளவு:
திருமலையில் அன்னமாச்சார்யா 612வது ஜெயந்தி உற்சவம்

பதிவு செய்த நாள்

09 மே
2020
12:05

திருப்பதி: திருமலையில் அன்னமாச்சார்யாரின், 612வது ஜெயந்தியை முன்னிட்டு அவர் எழுதிய கீர்த்தனைகள் பாடப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் கடந்த ஏப்.10ம் தேதி முதல் யோகவாசிஷ்டம் என்று பெயரில் மந்திரபாராயணத்தை நடத்தி வருகிறது. அதில், வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் உள்ள தன்வந்திரி ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் மாங்கல்ய பாக்கியம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம், துர்காபரமேஸ்வர ஸ்லோகம், ஏழுமலையானின் தியான மந்திரம் உள்ளிட்டவையும் பராயணம் செய்யப்படுகிறது.

இதை திருமலையில் உள்ள தர்மகிரி வேதபாடசாலை பிரின்சிபால் சிவசுப்ரமணிய அவதானி அவர்கள் கூற தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 29ம் நாள் பாராயணம் நடந்தது. அதற்கு முன்னதாக அன்னமாச்சார்யாரின், 612வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு மேடையில் அவர் எழுதிய கீர்த்தனைகள் சிலவற்றை இசை, நடன கல்லுாரி ஆச்சாரியர் வெங்கடேஸ்வரலு பாடினார். பின்னர் அன்னமாச்சார்யாரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் எழுதிய 32 ஆயிரம் கீர்த்தனைகள், அவரின் படைப்புத்திறன், அவர் ஏழுமலையான் மீது கொண்ட பக்தி உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி சிறிது நேரம் உரையாற்றினார். அதன்பின்னர், மந்திர பாராயணம் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், தேவஸ்தான ஆகம ஆலோசகர், கங்கணபட்டர், கோயில் இணை அதிகாரிகள், திருமலை செய்தியாளர்கள், தேவஸ்தான ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar