Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மஹா பெரியவரின் அவதார ஜெயந்தி ... மணக்குள விநாயகர் கோவில் ஆடியோ: பக்தர்கள் வரவேற்பு மணக்குள விநாயகர் கோவில் ஆடியோ: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு: பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தடை
எழுத்தின் அளவு:
வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு: பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க தடை

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2020
12:06

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு பூ, மாலை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அடைக்கப்பட்டன. நித்யகால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது.இந்நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண் மற்றும் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுத்த முடிவுகள்:வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்களின் பெயர், முகவரி மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேட்டில் பெற வேண்டும். அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். கோவில் நுழைவு வாயிலில் வைத்துள்ள தண்ணீர் மற்றும் கை கழுவும் திரவங்களை கொண்டு கை கால்களை கழுவிய பின் உள்ளே செல்ல வேண்டும்.

தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பூஜை பொருட்கள் கொண்டு வரக்கூடாது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் உள்ளிட்ட எந்தவித பிரசாதமும் வழங்கக்கூடாது.வழிபாட்டுதலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விருந்திற்கு அனுமதி இல்லை. காலணிகளை ஒன்றாக வைக்காமல் தனித்தனியே வைக்க வேண்டும். பக்தர்கள் வழிபாட்டு தலத்தில் எதனையும் தொடக்கூடாது. குளிரூட்டும் சாதனங்களை 24 முல் 30 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டும். அவசர உதவி 104, 1070, 1031 ஆகிய தொலைபேசி எண்களை கோவில் அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க முடிவு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar