Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க : ... அழகர்கோவில் தெப்பம் புதுப்பிப்பு: தினமலர் செய்தி எதிரொலி! அழகர்கோவில் தெப்பம் புதுப்பிப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படிப்படியாக மலை ஏறும் ஆக்கிரமிப்பு:கண் திறக்காத கோவில் நிர்வாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மே
2012
10:05

பழநி:பழநி மலைக்கோவில் அடிவாரம், கிரி வீதியைப் போல படி, யானைப் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. கோவில் நிர்வாகமோ, "போலீசார் தான் பொறுப்பு என, தன் பொறுப்பை தள்ளி விட்டு, அலட்சியமாக உள்ளது.பழநி அடிவாரம், சன்னிதி, கிரி வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு பஞ்சம் இல்லை. நகராட்சி, கோவில் நிர்வாகம் சார்பில், கண் துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும். ஓரிரு நாட்களில், அதே இடத்தில் அதே கடைகள் புத்துயிர் பெறும். கிரி வீதி பாத விநாயகர் கோவில் அருகே, பொருட்களை வாங்குமாறு சிறு வியாபாரிகள், பக்தர்களை தொந்தரவு செய்கின்றனர். வாங்காமல் செல்வோருக்கு, "வந்துட்டாங்கய்யா என, அர்ச்சனை வேறு.கோடை விடுமுறையால், ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். கிரிவலப் பாதையை வாகனங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. படி, யானைப் பாதையில் கடை வைத்துள்ளவர்கள், "பெருந்தன்மையாக கொஞ்சம் இடத்தை மட்டும், பக்தர்களுக்காக விட்டு வைத்துள்ளனர். யானைப் பாதை பூங்கா அருகே உடைந்த இடும்பன் சிலை, பல மாதமாகக் கிடக்கிறது. பாறைகள் குவிந்து கிடக்கின்றன. இது, கோவில் ஊழியர்கள் கண்ணில் மட்டும் படவில்லை. மன நிம்மதி தேடி முருகனை நாடும் பக்தர்கள், மலை ஏறி, இறங்குவதற்குள் "போதுமடா சாமி என, கும்பிடு போட்டு விட்டுத் தான் செல்ல வேண்டும். ஆக்கிரமிப்புகளை, கோவில் நிர்வாகம் கண் மூடி வேடிக்கை பார்ப்பது தான், கொடுமையின் உச்சம்.இது குறித்து, கோவில் இணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ""ஆக்கிரமிப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். இதில் போலீசார் அக்கறை காட்டவில்லை. நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மீண்டும் கடைகள் முளைத்து விடுகின்றன. போலீசார் நினைத்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல, கிரி வீதியை "பளீச் என, மாற்ற முடியும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar