Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மனுக்கு ... ஏகாம்பரகுப்பம் கோவில் குளம் துார் வாரும் பணி ஏகாம்பரகுப்பம் கோவில் குளம் துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் வராததால் கோசாலை பசுக்கள் பராமரிப்பில் சிக்கல்
எழுத்தின் அளவு:
பக்தர்கள் வராததால் கோசாலை பசுக்கள் பராமரிப்பில் சிக்கல்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2020
12:06

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு, கொரோனாவால் பக்தர்கள் வருகை குறைந்ததால், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு போதுமான தீவனங்கள் கிடைக்காத நிலை உள்ளது.

வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் கோசாலை அமைத்துள்ளது. இந்த கோசாலையில் 32 பசுக்கள், 6 கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 10 பசுக்கள் கறவை நிலையில் உள்ளன. நாள் ஒன்றுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் 20 லிட்டருக்கு மேல் பால் கறந்து, கோவில் பூஜைக்கு போக மீதமுள்ள பால், கூட்டுறவு பால் சொசைட்டிக்கு வழங்கப்படுகிறது.இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு கோசாலை பசுக்களுக்கு தீவனங்களும், இரு ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றனர். மேலும் ஐந்து பேர்களுக்கு மேல், சமூக சேவையாக கோசாலையில் உள்ள பசுக்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அகத்தி கீரை, பசுந்தீவன புல் மற்றும் வைக்கோல் போன்றவற்றை ஒவ்வொரு நாளும் தானமாக கொடுத்து வந்தனர்.தற்போது கொரோனா பரவலால் கடந்த சில மாதங்களாக கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது பக்தர்கள் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் போனது. எனவே, பசுந்தீவன புல், வைக்கோல் மற்றும் தீவனங்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினால், கோசாலையில் உள்ள பசுக்கள் பசியாறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar