தேனி,:ஆடி 3வது வெள்ளி, வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பெண்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் எலுமிச்சை விளக்கு ஏற்றிவழிபட்டனர். கீழமுத்தனம்பட்டியில் ஹிந்து முன்னணி அன்னையர் அணி சார்பில் காளியம்மன் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.