மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2020 02:08
திருக்கோவிலூர்: மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழா நடந்தது.
மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு பக்தர்கள் எடுத்துவந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி, வளைகாப்பு, தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதிக பக்தர்கள் இன்றி தனிமனித இடைவெளியுடன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.