Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்யாணி அம்மன்-கைலாச நாதர் கோயிலில் ... காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம்! காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் திரண்டனர்: 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மே
2012
11:05

சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் சந்தன அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை என, சிறப்பு பூஜைகள் 19ம் தேதி வரை நடைபெறும்.கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காக, ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது வழக்கம். வைகாசி மாத பூஜைக்காக, கோவில் நடை நேற்று முன்தினம் (14ம்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறந்தார். அதற்காக அவர் குத்துவிளக்கேந்தி வந்தார்.நடை திறந்த பிறகு அவர், பதினெட்டாம் படி இறங்கி, தேங்காய்களை எரிப்பதற்கான ஆழியில் தீ மூட்டினார்.

பின்னர் அவர், பதினெட்டாம் படி ஏறி, சன்னிதிக்கு திரும்பியதும், இருமுடி ஏந்தி தரிசனத்திற்காக காத்திருந்த திரளான பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். அன்றைய தினம் வேறு பூஜைகள் நடைபெறவில்லை.தொடர்ந்து, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. நேற்று காலை சகஸ்ரகலச பூஜை நடந்தது. நடை திறந்திருக்கும் நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளான, புஷ்பாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடைபெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 19ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி, சுவாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வித்தும், ஜெபமாலை அணிவித்தும் யோக நித்திரையில் ஆழ்த்தி நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar