Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செப்.19ல் திருமலை திருப்பதி ... ராஜகணபதி கோவில் விநாயகர் சதுர்த்தி விழா: யூ டியுப்பில் ஒளிபரப்பு ராஜகணபதி கோவில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி வழக்கு
எழுத்தின் அளவு:
விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க கோரி வழக்கு

பதிவு செய்த நாள்

18 ஆக
2020
09:08

 சென்னை; சதுர்த்தியை முன்னிட்டு, தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைவினை காதிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முருகன் தாக்கல் செய்த மனு:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தெருக்களில் சிலைகள் வைக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தெருக்களில் வைக்கப்படும் சிலைகள் முன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் கூடுவர். சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் தான், அதிக கூட்டம் கூடும்.வங்கி, தனிநபர்களிடம் இருந்து கடன் பெற்று, விநாயகர் சிலைகளை உருவாக்கி உள்ளோம். சிலைகளை விற்பனை செய்தால் தான், கடனை திருப்பி செலுத்த முடியும். பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதிக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான சிலைகள் வீணாகி விடும்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, இயற்கை முறையில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், சிலைகள் அதிக நாட்கள் தாங்காது. அடுத்த ஆண்டு வரை பராமரிக்கவும் முடியாது. ரம்ஜான் மற்றும் துாத்துக்குடியில் பனிமய மாதா கோவில் திருவிழாவுக்கு அனுமதித்தது போல, விநாயகர் சதுர்த்தி விழாவும் அனுமதிக்கப்படும் என, நம்பினோம். எனவே, தெருக்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, இளஞ்செழியன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகம் முழுதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை வைப்பதாக, ஹிந்து முன்னணி தலைவர் அறிவித்துள்ளார். அரசின் தடை உத்தரவை மதிக்காதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களை துாண்டிவிடும் இந்த செயலுக்காக, நடவடிக்கை எடுக்க கோரி, அரசுக்கு மனு அனுப்பி உள்ளேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, பூஜைகள் நடத்தவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும், அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar