Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள்
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள்

பதிவு செய்த நாள்

19 ஆக
2020
11:08

உடுமலை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத களி மண் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.விநாயகர் சதுர்த்திவிழா, வரும், 22ல் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பதை பாரம்பரியமாக கொண்டாடிவருகின்றனர்.

இந்த சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயனம் கலந்த வண்ணங்கள் பூசுவதால், குளம், கால்வாய் என நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீடுகளில், பாரம்பரிய முறைப்படி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, களிமண்ணால் செய்யபட்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.இதற்காக, களிமண் சிலைகள் தயாரிக்கப்பட்டு, உடுமலையிலுள்ள கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறியதாவது :களி மண், மணல் மற்றும் புற்று மண் ஆகியவற்றை இணைத்து, நீரில் ஊற வைத்து மண் வடிகட்டி, நன்கு பிசைந்து பசைபோல் மாற்றப்படுகிறது. அதற்கு பிறகு, பல்வேறு விநாயகர் வடிவங்களில் உள்ள அச்சுக்களில் வைத்து சிலைகள் உருவாக்கப்படுகிறது. பச்சை மண்ணில் செய்வதால் எளிதில் கரையும்.மேலும், இயற்கையான சாயம் மட்டுமே, இச்சிலைகளில் பூசப்படுகிறது. மசன கல், கிணத்துக்கல் ஆகியவற்றை சூளையில், அதிக வெப்பத்தில் சுடும் போது, தங்க நிறத்திற்கு மாறுகின்றன. அதனை, பொடியாக்கி, கரைத்து சிலைக்கு தங்க நிறச்சாயம் பூசப்படுகிறது.அதே போல், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் ஒரு சில செடிகளின் இலைகளிலும் வண்ணங்கள் தயாரித்து பூசப்படுகிறது. அரை அடி சிலை முதல், 4 அடி வரை, வடிவத்திற்கு ஏற்ப, களிமண் சிலைகள், 60 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar