தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2026 04:04
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10நாட்கள் நடைபெறும் விழாவில் தினம்தோறும் அம்மன் அலங்காரங்களுடன் சிம்மம்,குதிரை,காமதேனு,அன்னம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா கடந்த 5ம் தேதி நடைபெற்றது.6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்றனர். நேற்று பால்குடம் மற்றும் அம்மன் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லாக்கு வீதி உலாவும் நடைபெற்றது. திருக்கோயில் தீர்த்த வாரியுடன் இந்த வருடத்திற்கான திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், தாயமங்கலம் கிராம மக்கள்,பக்தர்கள் செய்திருந்தனர்.