மதுராந்தகம்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நேற்று மதுராந்தகம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு நடைபெற்ற பூஜையில் வேட்பாளர் அமுலு பொன்மலர் ஆதிபராசக்தி அம்மனையும், சுயம்பு அம்மனையும் வணங்கினார். கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையை வணங்கினார். பின் மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று, வேட்பாளர் அமுலு பொன்மலர் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுகள் சேகரித்தார். திராவிட மாடல் அரசின், கடந்த 5 ஆண்டுகளில் பொது மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், கோவிட் நிவாரண உதவித் தொகை, தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், மினி ஸ்டேடியம், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசினார். நிகழ்வில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.