Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்கள் திறப்பு பக்தர்கள் தயக்கம் கோவில்களில் பக்தி பரவசத்துடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,400 கோவில்கள் திறப்பு; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2020
05:09

ஈரோடு: கொரோனா ஊரடங்கு தளர்வில், ஈரோடு மாவட்டத்தில், 1,400 கோவில்கள், ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன.

ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கோவில்களான ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களில், அதிகாலை கோபூஜை, கோபுர பூஜைகள் நடத்தப்பட்டன. அதையடுத்து கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதே போல கொங்காலம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், வ.உ.சி., பார்க் ஆஞ்சநேயர், வீரப்பன் சத்தரம் மாரியம்மன், வலசு மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும், திருஷ்டி கழித்து கோவில் நடை திறக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள அமல அன்னை தேவாலயம் திறக்கப்பட்டது. முக கவசம் அணியாதவர்களை, உள்ளே அனுமதிக்கவில்லை.

சென்னிமலை...: சென்னிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த கூட்டமில்லை. கோவில் நிர்வாகம் சார்பில், மலைக்கு பஸ் இயக்கப்பட்டது.

கோபியில்...: கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், அதிகாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு, திருநீறு மண், மஞ்சள், குங்குமம் பொட்டலமாக வழங்கப்பட்டது. இதேபோல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி, பச்சமலை முருகன் கோவில்கள் நேற்று நடை திறக்கப்பட்டது. பச்சமலை முருகன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி பூஜை நடந்தது.

ராகு-கேது பெயர்ச்சி விழா: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சிவகிரி வேலாயுத சுவாமி கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. அக்னி குண்டம் வளர்த்து, ராகு, கேதுக்கு லட்சார்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதேசமயம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கோவில் திறக்கப்பட்டதால், பூஜை, அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar