குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வந்தார் குடும்ப மருத்துவர். ‘‘எத்தனை காலம் இப்படி இருப்பீர்கள். ஒரு குழந்தையை தத்து எடுத்து அன்பு செலுத்துங்கள்’’ என்றார். அனாதை விடுதிக்குச் சென்ற அவர்கள் அங்கு சிறுவன் ஒருவன் தங்களின் மகன் போல இருப்பதைக் கண்டனர். ஓடிச் சென்ற தாய் அந்தச் சிறுவனை அணைத்துக் கொண்டாள். ‘‘என் மகனாக இருக்க சம்மதமா? இப்போதே என்னுடன் வருவாயா? விளையாட பொம்மைகள், சாக்லெட்கள், புது சட்டை எல்லாம் தருவேன். உன் விருப்பமான பலகாரங்களை செய்து தருவேன். ஜாலியா ஊர் சுற்றலாம்’’ என்றாள். தாயின் அன்பையே அறியாத சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. ‘‘உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும். முதலில் அதைச் சொல்லுங்கள்?’’ என்றான். ‘‘கண்ணே உன் அன்பு வேண்டும்’’ என்றாள் அவள். சிறுவனும் சம்மதித்தான். இந்த தாயைப் போல ஆண்டவரும் நம் மீது அன்பு கொண்டவராக இருக்கிறார்.