Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாளய அமாவாசையில் சூரியஒளியில் ... சென்னிமலை முருகன் கோவிலில் அக்.,2ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
04:09

கரூர்: புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு, நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தட்சிணாயன புண்ணிய காலத்தில், மகாளய பட்ச புண்ணியகாலம் கடந்த, 2ல் துவங்கி, நேற்று மகாளய அமாவாசையோடு முடிவடைந்தது. இந்த, 15 நாட்களும், மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவர் என்பது நம்பிக்கை. எனவே, மகாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பாகும். இருந்துபோதும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட போது, பல்வேறு மாவட்டங்களில் கடல், ஆற்றங்கரைகளில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் எந்தவித தடையும் மாவட்ட நிர்வாகம் விதிக்கவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் மற்றும் நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட்டனர். இதற்காக, நெரூர் காவிரியாற்றில், 1,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தர்ப்பணம் கொடுத்த பின், அருகிலுள்ள பிரமேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்று வழிபட்டனர்.

* குளித்தலை, கடம்பந்துறை காவிரியாற்றில், ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு படையலிட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓத முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை கொடுத்து, கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar