ராசிபுரம்: கொரோனாவில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும், கொரோனா தொற்று அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திட வேண்டி, ராசிபுரத்தில் நடிகர் விஜய் மக்கள்இயக்கம் சார்பில், ராஜகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் எம்.பி., சின்ராஜ் கலந்து கொண்டார். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு முக கவசங்களை வழங்கி பேசினார். நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கொரனோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.