Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாண்டிக்குழி பாலமுருகன் ... கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் உலா கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுாரில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை
எழுத்தின் அளவு:
திருக்கோவிலுாரில் நவராத்திரி கொலு பொம்மை விற்பனை

பதிவு செய்த நாள்

07 அக்
2020
12:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நவராத்திரி விழா கொலு வைப்பதற்காக பொம்மை விற்பனை துவங்கப் பட்டுள்ளது. நவராத்திரி விழா என்றாலே பெரும்பாலான வீடுகளில் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இதற்காக ஆண்டு தோறும் விதவிதமான கொலு பொம்மைகளை கைவினை கலைஞர்கள் தயாரித்து விற்பனைக்குவைப்பது வழக்கம்.

அந்தவகையில் திருக்கோவிலூரில் பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை தயாரிப்பாளர்கள் பாரம்பரியமாக மண்ணால் செய்யப்பட்ட அஷ்டலட்சுமி செட், வளைகாப்பு செட், கல்யாணசெட், இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதிக்காத பேப்பர் கூழால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. செட் பொம்மைகள் ஆயிரம் ரூபாயிலிருந்து, ஆயிரத்து 700 ரூபாய் வரையும், தனித்தனி பொம்மைகள் உயரத்திற்கு தகுந்த வகையில், ரூ.100 முதல், 700 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி விழாவிற்கு இன்னும் 10நாட்கள் உள்ளது. சன்னதி வீதியில் சாலையோரம் கடை வைத்திருக்கும்  ஏரிப்பாளையத்தை சேர்ந்த மோகன், 37; கூறியதாவது: வழக்கமாக திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நவராத்திரி பொம்மை விற்பனை செய்வது வழக்கம். ஆனா ல் இந்த ஆண்டு திருக்கோவிலூரில் முதல் முறையாக கடை வைத்துள்ளேன். காரணம் கொரோனா அச்சம் காரணமாக விற்பனை எப்படி இருக்கும் என தெரியாத நிலையில், அருகிலிருக்கும் திருக்கோவிலூருக்கு வந்துள்ளோம். இப்பகுதி மக்கள்
மட்டுமல்லாது கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் பொம்மையை வாங்கிச்செல்கின்றனர். வரும் நாட்களில் விற்­பனை அதிகரிக்கக்கூடும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar