Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... 16ல் பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி சிலைகள் அகற்றம்: வனத்துறையினருக்கு எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
சுவாமி சிலைகள் அகற்றம்: வனத்துறையினருக்கு எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

14 அக்
2020
06:10

சத்தியமங்கலம்: ஆசனுார் வனப்பகுதியில், பழங்குடியின மக்கள் வழிபட்டு வந்த, சுவாமி சிலைகளை வனத்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி புலிகள் காப்பகம், ஆசனுார் வனக் கோட்டம், ஆசனுார் வனச்சரகம்,  அரேபாளையம் பிரிவு அருகே வனப்பகுதியில், பிசில் மாரியம்மன் கோவில் உள்ளது. வனப்பகுதியில் திறந்தவெளியில் அமைந்துள்ள இக்கோவிலில், ஆசனுார், அரேபாளையம், ஓங்கல்வாடி, சென்டர்தொட்டி, பங்களா தொட்டி கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

நேற்று மாலை ஆசனுார் வனத்துறையினர், பிசில் மாரியம்மன் சிலையை அகற்ற வந்தனர். இதையறிந்து மலை கிராம மக்கள் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பிசில் மாரியம்மன் கோவில், 50 ஆண்டு பழமையானது. வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருந்தாலும், விசேஷங்களுக்கு இங்கு தான் கூடுகிறோம். சிலைகளை அகற்றாமல், மற்ற வேலைகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ‘புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால், கட்டடம் இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் சுவாமி சிலைகளை அகற்ற உத்தரவு உள்ளது. இதனால் சிலைகளை அகற்றுகிறோம்’ என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வன அலுவலர் நாயுடு, ஆசனுார் பஞ்., தலைவர் சுப்பிரமணி, பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி ஜெயபாரதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
வனப்பகுதியில் உள்ள கோவில்களில், தரிசனம் செய்ய முறையான சமுதாய உரிமை அனுமதி வாங்க வேண்டும். மேலும், வனப்பகுதியில் உள்ள கட்டடங்கள் இல்லாத, திறந்தவெளி மற்றும் மரத்தடியில் அமைந்துள்ள சிலைகளை அகற்ற உத்தரவு வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் இதை ஏற்காததால், இரவு வரை போராட்டம் நீடித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar