Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீய சக்திகளை விரட்டும் ஆகாச கருடன் ... பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரிசூலநாத கோவில் நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கும் சீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
05:10

 திரிசூலம்: திரிசூலத்தில், கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு, அதிகாரிகள் நேற்று, சீல் வைத்தனர்மீதமுள்ள, 54 கட்டடங்களும் விரைவில் கைப்பற்றப்படும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை, பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், திரிசூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 77.82 ஏக்கர் நிலம், பல்வேறு சர்வே எண்களில், அக்கிராமத்தில் உள்ளது. இதில், 19 ஏக்கர் நிலம், பல்வேறு பயன்பாட்டிற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், வாடகைக்கு விடப்பட்டுள்ளது.மீதமுள்ள, 58.82 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளுக்கு முன், விவசாய நோக்கத்திற்காக, குத்தகைக்கு விடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின், விவசாயம் செய்ய போதிய தண்ணீர் வசதி இல்லாததால், காலி இடமாகவே பராமரிக்கப்பட்டது.இதை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்தவர் சிலர், நேரடியாக ஆக்கிரமித்து, கட்டடங்களை கட்ட துவங்கினர். கோவில் நிர்வாகம், கட்டுமான பணிகளை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கட்டடங்களை கட்டினர்.மொத்தம், 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியின்றி, பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்நிலையில், அறநிலையத் துறை சட்டப்பிரிவு, 78ன் கீழ், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டனர்.அது சம்பந்தமாக விசாரணை நடத்தி, 64, 65, 67/1, 67/2, 68 ஆகிய சர்வே எண்களில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள, 55 கட்டடங்களை அகற்ற, ஜூனில், அறநிலையத் துறை சென்னை மண்டல இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். முதல் கட்டமாக, போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை, அதிகாரிகள், ஒரு கட்டடத்தை பூட்டி, சீல் வைத்து, அறநிலையத் துறை வசமாக்கினர். அந்த கட்டடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன.அடுத்த கட்டமாக, எஞ்சியுள்ள, 54 கட்டடங்களை கைப்பற்றவும், அதன்பின், கைப்பற்றப்பட்ட கட்டடங்களை குத்ததைக்கு விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar