Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் பாகிஸ்தானில் பழமையான விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு பாகிஸ்தானில் பழமையான விஷ்ணு கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கடற்கரையில் பக்தர்களின்றி சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கடற்கரையில் பக்தர்களின்றி சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

21 நவ
2020
09:11

 துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று, பக்தர்கள் இல்லாமல், சூரசம்ஹாரம் நடந்தது.

திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நவ., 15ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அபிஷேகம்தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தங்கத்தேர் வீதி உலா நடக்கவில்லை.சூரசம்ஹாரத்தை ஒட்டி, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம், 1:00 மணியளவில் ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில், 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளினார்.

அங்கு, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 4:33 மணிக்கு, கோவில் கடற்கரை முகப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு போலீசார் மட்டும் பங்கேற்றனர்.பங்கேற்றனர்கஜமுகனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகனாகவும், பின் சுயரூபமான சூரபத்மனையும் வதம் செய்தார். பின், சேவலாகவும், மாமரமாகவும் போரிட்ட சூரனை, முருகப்பெருமான் ஆட்கொண்டார். நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதினம் ஞானசம்பந்தர், கலெக்டர் செந்தில்ராஜ், ஐ.ஜி., முருகன், கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கல்யாணி பங்கேற்றனர். அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar