பதிவு செய்த நாள்
21
நவ
2020
09:11
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று, பக்தர்கள் இல்லாமல், சூரசம்ஹாரம் நடந்தது.
திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நவ., 15ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. அபிஷேகம்தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தங்கத்தேர் வீதி உலா நடக்கவில்லை.சூரசம்ஹாரத்தை ஒட்டி, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம், 1:00 மணியளவில் ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில், 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளினார்.
அங்கு, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 4:33 மணிக்கு, கோவில் கடற்கரை முகப்பில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி துவங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு போலீசார் மட்டும் பங்கேற்றனர்.பங்கேற்றனர்கஜமுகனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து சிங்கமுகனாகவும், பின் சுயரூபமான சூரபத்மனையும் வதம் செய்தார். பின், சேவலாகவும், மாமரமாகவும் போரிட்ட சூரனை, முருகப்பெருமான் ஆட்கொண்டார். நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதினம் ஞானசம்பந்தர், கலெக்டர் செந்தில்ராஜ், ஐ.ஜி., முருகன், கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கல்யாணி பங்கேற்றனர். அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவில்லை.