Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீ வாணீஸ்வரர் கோயில் வருஷாபிஷேக ... பழநியில்,பாண்டவர் தங்கிய ஐவர் மலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: நிறைவுக்கு வந்த கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2020
05:11

சென்னிமலை, திண்டல், பச்சமலை முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவலால், நடப்பாண்டு கந்த சஷ்டி விழாவில், பக்தர்கள், கட்டளைதாரர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சஷ்டி விழா நிறைவாக, ஈரோடு மாவட்ட முருகன் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னிமலையில்...: சென்னிமலை முருகன் கோவில், திருக்கல்யாண உற்சவம், கைலாசாநாதர் கோவில் உட்பிரகாரத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்தது. முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடந்தது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம், தெய்வயானைக்கு மங்கள நாண் அணிவித்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார். இதையடுத்து, மகா தீபாராதனை நடந்தது. பின், சஷ்டி துவக்க விழாவில், காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்களின் காப்பை, கோவில் அர்ச்சகர் கழற்றி விரதத்தை முடித்து வைத்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

திண்டலில்...: திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதேபோல், இ.கா.வலசு கல்யாண சுப்ரமணியர் கோவிலில், மாப்பிள்ளை, பெண் அழைத்தல், யாகசாலை பூஜை, காசி யாத்திரை செல்லுதல், மாங்கல்யம் அணிவித்தல், மாலை மாற்றுதல், மாப்பிள்ளை விளையாட்டு உள்ளிட்ட, அனைத்து கல்யாண சடங்குகளுடன், திருக்கல்யாணம் நடந்தது. பச்சமலையில்...: கோபி, வேலமணி நகர் சக்தி விநாயகர் கோவிலில், சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம், அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, சிறப்பு அபிஷேகம், பழங்கள் மற்றும் பலகாரங்கள் கொண்ட, 31 சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar