Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தனக் காட்டுக்குள்ளே... முல்லா கொடுத்த பரிசு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
03:11

* பகலும், இரவும் போல இன்பமும், துன்பமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
* உணவை வீணாக்காமல் இருப்பது அன்னதானத்திற்கு சமம்.
* ஆணவம் துளியளவு இருந்தாலும் கடவுளை அடைய விடாமல் நம்மை தடுக்கும்.
* அறிவுள்ளவர்கள் அடக்கமுடன் இருப்பர். இல்லாதவரே அலட்டிக் கொள்வர்.
* சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினம்.  
* பொருள் வேண்டி வழிபடுவதை விட, கடவுளின் அருள் வேண்டி வழிபடுவது சிறந்தது.  
* பிறர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதையே நாமும் செய்ய வேண்டும்.
* அறிவும் மானமும் பங்காளிகள். ஒன்றை ஒன்று எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும்.
* அன்பு என்னும் துளிரில் இருந்து சேவை என்னும் மொட்டு வளர்ந்து பக்தியாக மலர்கிறது.
* அன்பு என்னும் விளக்கு அணைந்தால் பொறாமை என்னும் இருள் சூழும்.
* கடவுளை அடைய மிக எளிய வழி பிறர் மீது அன்பு செலுத்துவதே.
* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார். அவரை விட்டு உயிர் வாழ முடியாது.
* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுள் நாமமே இன்பம்.
* கடவுளை நினைக்கும் மனம் தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.
* கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல. நல்ல குணங்களை கற்பதே.
* பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.
* யாசகம் கேட்பதை விட இல்லை என மறுப்பவன் இழிந்தவன்.        
* கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நியாயமான பிரார்த்தனை.       
* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மகிழ்ச்சிக்கான வழி.      
* எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகும்.      
* பிறரது கருத்துக்கு மதிப்பளியுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.       
* பூமிக்கு வரும் போது எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது கொண்டு போவதுமில்லை.
* கடவுள் வாழும் வீடாக உடலைக் கருதுங்கள். அதை துாய்மையுடன் வைத்திருங்கள்.      
* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.       
* பட்டம், பதவிக்காக அலையாதீர்கள். அது தானாகவே தேடி வர வேண்டும்.    
* இயற்கை அழகில் ஈடுபடுங்கள். அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள்.         
* கடவுளை ஆராயக் கூடாது. நம்பிக்கை, ஆழ்ந்த அன்பு இருந்தால் அவரை அடையலாம்.       
* எங்கும் நிறைந்த தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar