பதிவு செய்த நாள்
29
நவ
2020
04:11
சபரிமலை:சபரிமலையில், 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும், என தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில், அவர் கூறியதாவது:சபரிமலையில், தற்போதய மண்டல காலத்தில், இதுவரை, 13 ஆயிரத்து, 529 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், அரசு இறுதி முடிவு அறிவித்த உடன் முன்பதிவு துவங்கும். திங்கள் முதல் கூடுதல் பக்தர்களை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்.இக்கட்டான சூழ்நிலையில், இந்த மண்டல சீசன் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், சன்னிதானத்தில் கூட்டம் கூட அனுமதி இல்லை.நவம்பர், 27 வரை, 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.தபால் பிரசாதத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கூடுதல் முன்பதிவு எப்போது துவங்கும் என்ற விபரத்தை, தேவசம் போர்டுக்கு தர வேண்டும் என்று, கேரள போலீஸ் துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். வனத்துறையின் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததும், ரோப்வே பணி துவங்கும். சபரிமலை நில அளவீடு செய்ய, ஜாயின்ட் சர்வே நடத்தப்படும்.இவ்வாறு வாசு கூறினார்.