பதிவு செய்த நாள்
30
நவ
2020
12:11
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில், கார்த்திகை பவுர்ணமி விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது.
திருக்கழுக்குன்றம், கிரிவலப் பாதையில், வேதகிரீஸ்வரர் கோவிலின் துணைக் கோவில்களில் ஒன்றாக, திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், நேற்று, கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால், மஹா அபிஷேகம், தீப, துாபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில், சொக்கம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருந்தார்.