பழநி கோயிலில் மார்கழி பூஜை: நாளை அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2020 11:12
பழநி : மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பழநி முருகன் மலைக்கோயில் நாளை (டிச.,16) முதல் 2021 ஜன.,18 வரை தினமும் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
மார்கழி முழுவதும் கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெறும். 2021 ஜன.,15 முதல் 18 வரை மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். ஜன.,19க்கு பின் வழக்கம்போல் காலை 6:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.நாளை அதிகாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதிகாலை 5:15 மணி முதல் இரவு 7:30 மணி வரை வின்ச் இயக்கப்படும். 41 டிரிப் களாக இருந்த பயணம் 58 ஆக மாற்றப்படும்.
ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் 15 நிமிடங்களுக்கு முன் வின்ச் நிலையம் வந்து பதிவை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 04545 - -242 683 என்ற எண்ணுக்கு ஒருநாள் முன்னதாக ஆதார், தொலைபேசி, முகவரியை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.ஒரு அழைப்புக்கு இருவர் வீதம் நாள் ஒன்றுக்கு 200 பேர் அனுமதிக்கப் படுவர். காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை முன்பதிவு செய்யப்படும். இதர பக்தர்கள் பயணச்சீட்டு பெறவேண்டும் என செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி தெரிவித்தார்.