அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி கடலில் நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2020 11:12
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில்8 மாதங்களுக்கு பிறகு கார்த்திகை அமாவாசை தினமான நேற்றுஏராளமான பக்தர்கள் புனித நீராடிதரிசனம் செய்தனர்.
கொரோனாபரவலை தடுக்க ஆடி, புரட்டாசி மாத அமாவாசை தினத் தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் பூஜை செய்து நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வட, தென் மாநில பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். கார்த்திகை அமாவாசையான நேற்றும் நீராட போலீசார் தடை விதித்தனர். ஆனால் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய அமாவாசை தினத்தில் பூஜை செய்து நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட நிர்வாகம் அனுமதியை தொடர்ந்து அக்னி தீர்த்த கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தர்பணம் பூஜை செய்து நீராடினர். கோயிலில் நீண்ட வரிசையில் சமூக விலகலுடன் தரிசனம் செய்தனர்.