Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் பெருமாள் கோவிலில் ... காளியம்மன் கோவிலில் மார்கழி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி: முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2020
05:12


நாமக்கல்: வரும், 25ல், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. அதற்காக, முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் இணை ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், வரும், 25ல், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நெறிகாட்டு முறையின்படி, இந்த ஆண்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று, அதிகாலை, 4:30 முதல், 6:00 மணிக்குள், சொர்க்கவாசல் எனும், பரம பத வாசல் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. கோவில் பூஜைகள், அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை, யூடியூப் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும். காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதற்காக, இன்று (டிச., 17) முதல், ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும், பக்தர்கள் முன்பதிவு டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்கு, 1,500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர். அதில், 750 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களும், 750 பேர், முன்பதிவு டோக்கன் பெற்றவர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப, இலவச தரிசனம், 25 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் வழிகளில், சமூக இடைவெளியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஆக. 29) நடக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை ; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar