பதிவு செய்த நாள்
19
டிச
2020
11:12
பல்லடம்: பல்லடம் அருகே, உலக அமைதி வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரில், இந்து அன்னையர் முன்னணி சார்பில், 208 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் லோகநாதன், இன்று அன்னையர் முன்னணி மாவட்ட பொது செயலாளர் நிர்மலா, மற்றும் மாவட்ட செயலாளர் சரோஜினி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உலக அமைதி, தொழில் வளர்ச்சி, மக்களுக்கு, 16 செல்வங்களும் கிடைக்க வேண்டியும், திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற, 208 பெண்களும் தலைவாழை இலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றால் விளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, மஞ்சள் சரடு, பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பிரசாதம் வைத்து வழிபட்டனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.