திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று துவங்கியது. கோயிலில் உற்ஸவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டத்தை மூன்றுமுறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி னார். சிவாச்சார்யார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப் பட்டது. அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல்துலக்குதல், மைஇட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. ஜன.,5வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்ஸவ நாட்களில் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.