Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோயில் காளைக்கு முடிகாணிக்கை லாஸ்பேட்டையில் ஆருத்ரா தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி வீதியுலாவுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
04:01

சென்னை:கோவில்களில் சுவாமி வீதியுலாவுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், மார்ச், 25ல்,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. சில மாதங்களுக்கு பின், கிராம பகுதிகளில், கோவில்கள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல், படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களும், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

பிரபலமான கோவில்களுக்கு வருவோர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், திருச்செந்துார் உட்பட சில கோவில்களில், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என, அனைவரும் ஒரே வரிசையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இது, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் முறையாக முன்பதிவுசெய்தவர்களை, தனியே அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல, கோவில்களில் சுவாமி வீதியுலாவிற்கு, இன்னமும் அனுமதி அளிக்கப்படவில்லை. சுவாமி வீதியுலா சென்றால், கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறையும். அவரவர் தங்கள் வீடுகளின் முன் நின்று, சுவாமியை வழிபடுவர். முதல்வரின் தேர்தல் பிரசாரம் மற்றும் தி.மு.க., நடத்தும், மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.இதற்கெல்லாம் அனுமதி அளிக்கும் அரசு, சுவாமி வீதியுலாவிற்கு மட்டும், அனுமதி மறுப்பது ஏன் என, பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.அனைத்து தளர்வுகளையும் அறிவித்துள்ள தமிழக அரசு, கோவில்களில் சுவாமி வீதியுலாவிற்கு, அனுமதி அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar