கோவை: சிங்காநல்லுார் அருகே ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவிலில், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடத்தப்பட்டது.சிங்காநல்லுார் அருகே கள்ளிமடை ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி வெகுவிமரிசையாக நடைபெறும். புத்தாண்டு பிறப்பான நேற்று, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காரணப்பெருமாள் வெண்பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.