பெண்ணாடம்: மார்கழி மாத சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம், வீற்றிருந்த பெருமாள் கோவிலில் கோ பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 5:30 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேதநாராயண பெருமாள் சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 7:30 மணியளவில், கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கு கோ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.