Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிட்டாய் முருகனும் மூலிகை மலையும் ... நாட்டரசன்கோட்டையில் ஜன.19ல் செவ்வாய் பொங்கல் நாட்டரசன்கோட்டையில் ஜன.19ல் செவ்வாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி சப்பரம்
எழுத்தின் அளவு:
மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி சப்பரம்

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
09:01

 மதுரை : எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விதமாக நாளை (ஜன.,6) காலை மதுரை வெளிவீதிகளில் அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரை திருவிழா உள்ளிட்ட மீனாட்சி கோயில் திருவிழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாக அஷ்டமி சப்பரம் வலம் வர மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

நாளை காலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்கள் புறப்பாடாகி, யானைக்கல், நான்கு வெளி வீதிகள், குட்ெஷட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, விளக்குத்துாண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேரும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி செல்லத்துரை செய்து வருகின்றனர்.

அஷ்டமி சப்பரம் ஏன்சிவபெருமான் கையிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதம் தானியமிட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து பார்வதி கேட்க, படி அளப்பதாக சிவபெருமான் கூறினார். இதை பரிசோதிக்க நினைத்த பார்வதி மறுநாள், ஒரு எறும்பை குவளை ஒன்றில் அடைத்து வைத்தார். பின் அக்குவளையை திறந்து பார்த்தபோது எறும்பு ஒரு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. தன் செயலுக்கு சிவபெருமானிடம் பார்வதி வருத்தம் தெரிவித்தார். அந்நாளே மார்கழியில் வரும் தேய்ப்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்ணம் ஆகும். சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் சப்பரத்தில் வலம் வருவர். அம்மன் சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து வருவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரமோற்சவ ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar