கள்ளக்குறிச்சி; புக்கிரவாரி மேலத்தெருவில் உள்ள ஸ்ரீசவுந்தர்யநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி மேலத்தெருவில் ஸ்ரீசவுந்தர்யநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவில் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி முடிவடைந்ததையொட்டி, கடந்த 8ம் தேதி முகூர்த்தகால் நடுதல், காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. கடந்த 17ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, புண்யாகவசனம், பஞ்சகவ்யம், பஞ்சாசனம், கணபதி ேஹாமம் நடந்தது.மாலை 4 மணிக்கு யாகசால பிரவேசம், மண்டப ஆராதனை, முதற்காலயாக பூஜை ஆகியவை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, 7 மணிக்கு கோ பூஜை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் திருபணிக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.