பதிவு செய்த நாள்
28
ஜன
2021
10:01
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்துள்ள, கொண்டையம்பாளையத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 5:00 மணிக்கு தைப்பூச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, முருகப்பெருமான், வள்ளி - தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்தில், திருவீதி உலா அதிகாலை வரை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர் மற்றும் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை சமேதரராய் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்று இரவு, தேர் நிலை வந்தடைகிறது. நாளை, முருகப்பெருமான் வள்ளி - தெய்வானை சமேதரராய் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, சிறப்பு மாட்டு சந்தையில், பல்வேறு வகையான மாடுகள் விற்பனைக்கு வருகிறது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர்.